வைராக்கியம்:
மனம் எப்பொழுதும் வெளி நோக்கியே செல்லும். வெளியில் உள்ள பொருட்களில் இன்பம் இல்லை என்று காலப்போக்கில் நாம் உணருகிறோம், இதை "வைராக்கியம்" என்பர். மண், பொன், பெண், பொருள், புகழ் எல்லாம் சிறிது காலத்திற்கே இன்பம் தருவன. இவை நிலையிலான இன்பம் தருவனவல்ல, சிறிது காலத்திற்குப் பின் துன்பத்தையே தருவன என்பதை உணர உணர நம் வைராக்கியம் வளர்கிறது.