ஆசைக்கோ ரளவில்லை அகிலமெல் லாங்கட்டி
ஆளினுங் கடல்மீதிலே
ஆனைசெல வேநினைவர் அளகேசன் நிகராக
அம்பொன்மிக வைத்தபேரும்
நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்
நெடுநா ளிருந்தபேரும்
நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி
நெஞ்சுபுண் ணாவர்எல்லாம்
யோசிக்கும் வேளையிற் பசிதீர உண்பதும்
உறங்குவது மாகமுடியும்
உள்ளதே போதும்நான் நான்எனக் குளறியே
ஒன்றைவிட் டொன்றுபற்றிப்
பாசக் கடற்க்குளே வீழாமல் மனதற்ற
பரிசுத்த நிலையை அருள்வாய்
பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூர ணானந்தமே.
- தாயுமானவர் ( பரிபூரணானந்தம். பாடல் எண் 10)
My version after reading the above Thayumanavar's song
ஆசைக்கோர் அளவில்லை !
அகிலமெல்லாம் கட்டி ஆண்டாலும்,
அலை கடல் மேல் ஆட்சி புரிந்தாலும்,
பொன்மணி வைரங்கள் குவிந்தாலும்,
புகழ் மலை உச்சியில் அமர்ந்தாலும்,
ஆசைக்கோர் அளவில்லை
என் மனமே,
உன் ஆசைக்கோர் அளவில்லை !
No comments:
Post a Comment